Saturday, September 14, 2024
HomeSchemesஉங்கள் வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் ரூ.3,00,000 பெறலாம்! முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்!...

உங்கள் வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் ரூ.3,00,000 பெறலாம்! முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்! TN CM Girl Child Protection Scheme

TN CM Girl Child Protection Scheme: “வணக்கம் தோழிகளே! இன்றைய பதிவில் நாம் பார்க்கப்போவது, உங்கள் பெண் குழந்தையின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் மிக முக்கியமான திட்டம் – முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்!

இத்திட்டத்தின் மூலம், அரசு உங்கள் பெண் குழந்தையின் பெயரில் ஒரு நிதி உதவித் தொகையைச் சேர்த்து வைக்கிறது. இது, அவர் 18 வயது பூர்த்தியாகும் போது, அவருக்கு ஒரு பெரிய நிதி உதவியாக அமையும். இது அவளது மேற்படிப்பு, திருமணம் அல்லது தொழில் தொடங்குவது போன்ற எந்தவொரு முக்கியமான காலகட்டத்திலும் அவளுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

தமிழக அரசின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் இரண்டு வகைகளில் செயல்படுத்தப்படுகிறது TN CM Girl Child Protection Scheme:

  1. ஒரு பெண் குழந்தை கொண்ட குடும்பங்களுக்கு: குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை இருப்பின், அந்தக் குழந்தையின் பெயரில் அரசு ரூ. 50,000/- தொகையை வங்கியில் செலுத்தி, அவளது எதிர்காலக் கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்காகப் பாதுகாக்கும்.
  2. இரண்டு பெண் குழந்தை கொண்ட குடும்பங்களுக்கு: குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் இருப்பின், ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் ரூ. 25,000/- வீதம், மொத்தம் ரூ. 50,000/- தொகை வங்கியில் செலுத்தப்படும்.

TN CM Girl Child Protection Scheme பயன்பெறத் தகுதி:

  • குழந்தை தமிழகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
  • குழந்தை பள்ளியில் தொடர்ந்து கல்வி பயின்று வர வேண்டும்.
  • குடும்ப வருமானம் குறிப்பிட்ட அளவுக்குள் இருக்க வேண்டும். (இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள அரசு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும்.)

பணத்தை எடுக்கும் முறை:

  • குழந்தை 18 வயதை எட்டிய பின்னர், இந்தத் தொகையை வங்கியிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
  • இந்தத் தொகையை கல்வி, திருமணம் அல்லது தொழில் தொடங்குதல் போன்ற நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

வட்டி மற்றும் தொகை:

  • 18 வயது நிரம்பிய பின்: குழந்தை 18 வயது நிரம்பும்போது, அரசால் செலுத்தப்பட்ட தொகை மற்றும் அதன் மீதான வட்டி, குழந்தையின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
  • ஒரு குழந்தை கொண்ட குடும்பங்கள்: ஒரு பெண் குழந்தை கொண்ட குடும்பங்களுக்கு, மொத்தம் ரூ. 3,00,000/- வரை (அசல் தொகை மற்றும் வட்டி உட்பட) வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
  • இரண்டு குழந்தை கொண்ட குடும்பங்கள்: இரண்டு பெண் குழந்தைகள் கொண்ட குடும்பங்களுக்கு, ஒவ்வொரு குழந்தையின் கணக்கிலும் தனித்தனியாக ரூ. 1,50,0,00/- வரை (அசல் தொகை மற்றும் வட்டி உட்பட) செலுத்தப்படும்.

தேவையான ஆவணங்கள்:

  • வருமான சான்றிதழ்
  • இருப்பிட சான்றிதழ்
  • ஆண் குழந்தை இல்லை என்ற சான்றிதழ்(no male child certificate)
  • சாதி சான்றிதழ்
  • பெண் குழந்தை பிறப்பு சான்றிதழ்
  • கருத்தடை சான்றிதழ்(Sterilization Certificate)
  • குடும்ப அட்டை
  • ஆதார் கார்டு
  • திருமண சான்றிதழ்
  • Family Photo
  • Age Certificate அல்லது TC(father/ Mother) போன்ற ஆவணங்கள் இருக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் பெறும் இடம்:

  • வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆண் குழந்தை இல்லை என்ற சான்றிதழ், சாதி சான்றிதழ்: இவற்றை அருகிலுள்ள தாசில்தார் அலுவலகத்தில் சென்று பெற்றுக்கொள்ளலாம்.
  • பெண் குழந்தை பிறப்பு சான்றிதழ், கருத்தடை சான்றிதழ்: இவற்றை அருகிலுள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்தில் சென்று பெற்றுக்கொள்ளலாம்.
  • திருமண சான்றிதழ்: இதை துணை பதிவாளர் அலுவலகத்தில் சென்று பெற்றுக்கொள்ளலாம்.

முதலமைச்சரின் பெண் குழந்தை திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதி:

  • ஆண்டு வருமானம்: விண்ணப்பதாரரின் குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ரூ. 72,000-க்குள் இருக்க வேண்டும்.

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் முறை:

  • நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் (BDO) என்ற அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும்.
  • BDO அலுவலகத்தில் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்திற்கான விண்ணப்ப படிவத்தைப் பெறவும்.
  • விண்ணப்ப படிவத்தில் கேட்கப்படும் அனைத்து விவரங்களையும் துல்லியமாக நிரப்பவும்.தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும். BDO அலுவலகத்தில் ஆவணங்கள் குறித்த முழுமையான விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
  • BDO அலுவலகம் உங்கள் விண்ணப்பத்தையும் ஆவணங்களையும் சரிபார்த்து, அசல் ஆவணங்களை உங்களிடம் இருந்து பெற்று, ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளும்.
  • BDO அலுவலகம் உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்து, தகுதி உடையவராகக் கண்டால், உங்கள் பெயரில் மற்றும் உங்கள் குழந்தையின் பெயரில் இணைந்து ஒரு வங்கி கணக்கு தொடங்கப்படும்.
  • சுமார் இரண்டு மாதங்களுக்குள், இந்த வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டதற்கான சான்றிதழை (Photocopy) BDO அலுவலகம் உங்களுக்கு வழங்கும். இந்த சான்றிதழை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

புதுப்பித்தல்:

  • டெபாசிட் செய்த தொகையினை “Tamilnadu Power Finance & Infrastructure Development Corporation Limited-ல்” பராமரித்து வருகிறார்கள்.
  • முதலமைச்சரின் பெண் குழந்தை திட்டத்தில் டெபாசிட் செய்த பிறகு, ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் இந்தத் திட்டத்தை உங்கள் அருகிலுள்ள வங்கி கிளை (BDO) அலுவலகத்தில் புதுப்பிக்க வேண்டும்.
  • புதுப்பிப்பின் போது, உங்கள் புகைப்பட நகல் தேவைப்படும். எனவே, இந்த புகைப்பட நகலை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்.
  • ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் தவறாமல் புதுப்பிப்பதன் மூலம், உங்கள் பெண் குழந்தை 18 வயது பூர்த்தி அடைந்ததும், அவருடைய கணக்கில் ரூ. 3,00,000/- வரவு வைக்கப்படும்.
  • இரண்டு பெண் குழந்தைகள் இருப்பின், ஒவ்வொரு குழந்தையின் கணக்கிலும் ரூ. 1,50,000/- வீதம் வரவு வைக்கப்படும்.
  • முக்கிய குறிப்பு: திட்டத்தைத் தொடர்ந்து புதுப்பிக்கத் தவறினால், உங்களுக்கு கிடைக்கும் தொகை பாதிக்கப்படலாம்.
  • மேலும் விவரங்களுக்கு, உங்கள் அருகிலுள்ள வங்கி கிளை (BDO) அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.
PREM
PREMhttps://breakingnewstamil.in
My name is Prem, and I am a Content Writer with a passion for creating engaging and informative content. With over 3 years of professional experience, I specialize in crafting job articles, news blogs, and government schemes blogs. My goal is to deliver content that informs, inspires, and engages readers.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments